Home

திருவிவிலியம்

பொது மொழிபெயர்ப்பு

முன்னுரை

கிறித்தவர்களின் புனித நூலாகப் போற்றப்பெறுகின்ற திருவிவிலியம் (The Holy Bible) பல தனி நூல்களை உள்ளடக்கிய ஒரு தொகுப்பு ஆகும். திருவிவிலிய நூல்கள் எல்லாம் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்னும் இரு பெரும் பிரிவுகளுக்குள் அடங்கும். பழைய ஏற்பாட்டு நூல்களை யூத சமயத்தைச் சார்ந்தவர்களும் தம் புனித நூலாகக் கொள்வர். அவை பெரும்பாலும் எபிரேய மொழியில் எழுதப்பட்டன.

இயேசு கிறித்துவின் பிறப்புக்குப் பின்னர் எழுதப்பட்ட நூல்கள் புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ளன. இவை கிரேக்க மொழியில் எழுதப்பட்டன.

விவிலிய நூல்களை உருவாக்கியோர் மனிதர்களே என்றாலும் அவற்றின் மூல ஆசிரியர் கடவுளே என்பது யூத மற்றும் கிறித்தவ நம்பிக்கை. எனவே, விவிலியத்தை மனிதர்களால் எழுதப்பட்ட, கடவுளின் வார்த்தை என்றும் கூறுவர்.

பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு